செவ்வாய், 31 மே, 2011

ஹாய் நலமா?

ஹாய் நலமா? சமீபத்தில் நான் படித்து ரசித்த வலைபூ இது.  அதிகமான வலைப்பூகளை நான் படித்திருந்தாலும் இது மிக பயனுள்ளதாக இருந்தது.   " சுவர் இருந்தால் தன சித்திரம் வரைய முடியும் " என்பார்கள் நமது முன்னோர்கள்.   அது உண்மைதானே?  நாம் இப்போது சுவற்றை மறந்து பல வருடங்களாகி விட்டது.  நமக்கு இப்பொது பணத்தை தேடி ஓடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது.  கடைசியில் எதற்காக பணத்தை தேடினோமோ அதை அனுபவிக்க முடியாமல் போகிறது.  என்ன அது என்கிறீர்களா? வாழ்க்கைதான் !   சத்தான உணவுகளின் பெயர் எல்லாம் காலாவதி ஆகி விட்டது.   இந்த வலைபூவை பார்த்த பிறகு தன் நாம் செய்யும் தவறுகள் புரிந்தது.  சுவரை விற்றுவிட்டு சித்திரம் வாங்கி என்ன பயன் சொலுங்கள்?

              உடல் உழைப்பும் தற்போது மிகவும் குறைந்து விட்டதால் நோய்களுக்கு கொண்டாட்டம் ஆகி விட்டது.  என செய்ய ?  நமக்கு இயந்திரங்களே கதி என்று ஆகி விட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும் ?  " உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூலர். சரி நான் தலைபுக்கு வருகிறேன்.  மிகவும் பயனுள்ள இந்த வலைபூவை பாருங்கள்! பயன்பெறுங்கள்!
         இங்கே கிளிக் பண்ணவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக